Pages

Sunday 26 August 2012

Retirement Planning - Innovative Solution in Naanayam Vikatan 26th August 2012

ஓய்வுக்காலத் திட்டம்: இனி தேவை இல்லை பயம்!
ம்ம வீட்ல ஒரு மா மரத்த வெச்சு தினமும் தண்ணி ஊத்துறோம்... எதுக்காக? பின்னாளில் அது காய்ச்சு நமக்கு பழம் கொடுக்கும்ங்குற நம்பிக்கையிலதானே..? - கடைசி காலத்தில் பிள்ளைகளின் கவனிப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்த சினிமா வசனம் இது!

''ஆனால், ஓய்வுக்காலத்துக்காக முறையாகத் திட்டமிடாமல் இருந்துவிட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றிய பெற்றோர்கள், தமது ஓய்வுக் காலத்திற்கென்று திட்டமிடாமல் இருந்தது அவர்களின் தவறே! தவிர, இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலவரம் நாம் ஓய்வுபெறும்போது இருக்குமா என்றால் இருக்காது. நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துதான் வருகிறது. எனவே, இன்று முதல் ஓய்வுக்காலத்திற்குத் திட்டமிடுவது அவசியம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.  

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைப்பது போல, தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களும் தமது ஓய்வுக்காலத்தில் தாமாகச் சேமித்து வைத்த தொகையிலிருந்து எப்படி பென்ஷன் பெறலாம்? அது போக அதிலிருந்து ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் மொத்த வருமானம் எவ்வளவு இருக்கும்? என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் அவர்.

''இந்திய அரசு சார்ந்த வேலைகளை செய்கிறவர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் 10% தொகை பிடித்தம் செய்து சேமிக்கப்பட்டு அதிலிருந்து பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த பென்ஷன் திட்டத்தில் இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, சேமித்த மொத்தப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு, மீதி இருக்கும் பணத்திலிருந்து மாதாமாதம் பென்ஷன் பெறலாம். அல்லது மொத்தப் பணத்திலிருந்தும் பென்ஷன் வாங்கலாம்.

பென்ஷன்தாரர் இறந்த பின்னர் அவருக்கு கிடைத்த மாத பென்ஷனிலிருந்து, மனைவியின் வாழ்க்கைக் காலம் வரை மாதாமாதம் 50% தொகை கிடைக்கும். அவருக்குப் பிறகு அவர்களின் பிள்ளைகளுக்கு பென்ஷன் தொகை எதுவும் கிடைக்காது. மறைமுகமாகச் சேமிக்கப்படும் இந்த தொகை அவர்களின் ஓய்வுக்காலத்தில் நிச்சயம் பேருதவியாக இருக்கிறது.

ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த வசதி இல்லை. இவர்கள் ஓய்வுக்கால நிதித் திட்டமிடலைச் செய்யாமல் விடும்போது, பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் கைவிடப்படும்போது பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். எதிர்காலத்தில் வரப்போகிற இந்த சிக்கலைத் தவிர்க்க இப்போதே ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் திட்டமிடுவது அவசியம்.

இதற்கு ஒரேவழி, அரசு பணியாளர்களைப் போலவே தனியார் நிறுவன ஊழியர்களும் தங்களது மாதச் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதத் தொகையை ஓய்வுக்காலத்திற்காக ஒதுக்குவதே! இந்த முதலீட்டை ஓய்வுக்காலம் வரை தொடரவேண்டும். இதன்மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உதாரணத்திற்கு ஒருவருக்கு இதுபோன்று வந்த முதலீட்டுத் தொகை 12 லட்சம்  ரூபாயை கீழே தரப்பட்டிருக்கும் திட்டத்தின் அடிப்படையில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.

கடந்த 17 ஆண்டுகளில் ஏற்ற இறக்கத்திலும் லாபம் ஈட்டி தந்திருக்கும் இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளை எடுத்துக்கொள்வோம். ஒன்று, ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்ட், மற்றொன்று பிர்லா சன் லைஃப் 95. இந்த இரண்டு ஃபண்டுகளும் கடந்த பதினேழு ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், இறுதியில் இன்று நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேலே சொன்ன ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்டுகளில் 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், வருடத்திற்கு 10 சதவிகிதம் என்ற கணக்கில் மாதா மாதம் சிஸ்டமெட்டிக் வித்டிராயல் பிளான் (ஷிகீறி) முறையில் 10,000 ரூபாய் அதிலிருந்து பென்ஷன் தொகையாக (அனுமானம்) எடுத்தது போக, பத்தாண்டு இறுதியில் 79.72 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் கிடைத்திருக்கும்.
அதேபோல் பிர்லா சன் லைஃப் 95 ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், பென்ஷன் தொகையாக எடுத்ததுபோக 51.96 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். 

அதேபோல் 1995-2005, 1996-2006 என்கிற பத்தாண்டு அடிப்படையில் முதலீடு செய்திருந்தால் மாதா மாதம் 10,000 ரூபாய்  எடுத்தது போக, குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாயும், அதிகபட்சம் ஒரு கோடி ரூபாயும் வருமானமாக கிடைத்திருக்கும். இந்த தொகை முதலீட்டாளருக்குப் பயன்படுவது மட்டுமல்லாமல் அவரின் மனைவி மற்றும் வாரிசுகளுக்கும் பயன்படும்.
பொதுவாக அனைவருக்குமான சமீபத்திய முதலீடு தங்கமும், ரியல் எஸ்டேட்டுமாகத்தான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் என்பதால் அந்த இரண்டில் மட்டுமே காசை கொட்டி முதலீடு செய்கிறார்கள் மக்கள். பங்குச் சந்தையில் எப்படி ஏற்ற இறக்கம் சகஜமோ, அதேபோலத்தான் இதுபோன்ற முதலீடுகளிலும் ஏற்ற இறக்கம் உண்டு. அதற்காக அதில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. அதில் மட்டுமே முதலீடு செய்வது தவறு!

ஓய்வுக்காலத்தில் பெரும்பாலானவர்கள் ரிஸ்க் குறைவு என்பதால், அஞ்சலக ஆர்.டி, பேங்க் எஃப்.டி. போன்ற முதலீட்டு இடங்களையே தேர்வு செய்கிறார்கள். அதை மட்டுமே தேர்வு செய்யாமல் மேலே சொன்னதுபோல பேலன்ஸ்டு ஃபண்டுகளையும் தேர்வு செய்து நமது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்.
ஓய்வுக்காலத் தொகையிலிருந்து  (பி.எஃப்., பணிக் கொடை) 50% தொகையை இதுபோன்று பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, மீதி தொகையை அஞ்சலக ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரிஸ்க் குறைவானவற்றில் முதலீடு செய்யலாம்.

இன்னொரு விஷயம், நீண்ட கால முதலீடு (10-15 ஆண்டுகள்) என்கிறபோது ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம். என்னதான் பங்குச் சந்தை ஏறி இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கிற லாபம் ஆர்.டி., எஃப்.டி. அளிக்கும் லாபத்தைவிட அதிகமாகவே இருக்கும்!

குறிப்பு: கடந்த 10, 15 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிலவரங்களின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டிருக்கும் வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் சந்தை நிலவரப்படி இந்த வருமானம் மாற்றத்துக்குட்பட்டது.

Sunday 12 August 2012

My Article on Credit Card in Naanayam Vikatan 12th August 2012

கிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம்!
''இன்றைக்கு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலருக்கு அதன் கட்டண முறை பற்றி சரியாகத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள கவனம் செலுத்துவதுமில்லை. இதனாலேயே பலவகையான மறைமுக கட்டணத்தைச் செலுத்தி, பின்பு புலம்புகிறார்கள். இந்த கட்டண விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால், கண்டிப்பாக காசை மிச்சப்படுத்தலாம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பத்மநாபன். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வசூலிக்கும் பல வகையான கட்டணங்கள் பற்றி அவரே விளக்கிச் சொன்னார்.
   கட்டணங்களின் வகை!
சேர்க்கைக் (அறிமுகக்) கட்டணம், ஆண்டுக் கட்டணம், பணம் எடுத்தலுக்கான கட்டணம், வட்டி, நிதிக் கட்டணம், காலதாமதக் கட்டணம், சேவைக் கட்டணம் என பல கட்டணங்கள் உண்டு. இனி ஒவ்வொரு கட்டணத்தையும் பார்ப்போம்.
அறிமுகம் மற்றும் ஆண்டுக் கட்டணம்!
பெரும்பாலான வங்கிகள் இந்த இரண்டு கட்டணங்களும் இல்லாமல் கிரெடிட் கார்டுகளை தருகின்றன. ஆனால், சில கார்டுகளில் நாம் குறிப்பிட்ட அளவு செலவு செய்யாவிட்டால் அதற்கு அடுத்த ஆண்டில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணத்தைத் தவிர்க்க கிரெடிட் கார்டு வாங்கியவுடன் கட்டணம் குறித்த விவரங்களை உறுதிபடுத்திக்கொள்வது நல்லது.
சில கார்டுகளுக்கு முதலில் நாம் 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். அதற்கு தேவையான அளவு கூப்பன்கள் தருவார்கள். இது மாதிரியான விஷயங்கள் அதிக வருமானம் பெறுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்பதால் கூப்பன் தருகிறார்கள் என்பதற்காக எல்லோரும் இதில் ஈடுபாடு காட்டுவது நல்லதல்ல.

நகல் ஆவணக் கட்டணம்!
பெரும்பாலான கிரெடிட் கார்டுகளின் ஸ்டேட்மென்ட்கள் தபால் மற்றும் மின்னஞ்சலில் வரும். இதை பத்திரப்படுத்தாமல் தொலைத்துவிட்டால் தேவை என்கிறபோது வங்கியில் நகல் ஆவணம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இதை பெற 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

வட்டி மற்றும் சேவைக் கட்டணம்!
ஸ்டேட்மென்ட் வந்த இருபது நாட்களில் நாம் பணத்தைக் கட்ட வேண்டும். தவறினால் அதற்கு 2.5% முதல் 3.5% வரை மாதந்தோறும் தினசரி கூட்டு வட்டி முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக. ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருள் வாங்கியிருந்தால் அவருக்கு வருடத்திற்கு 35% முதல் 52% வரை வட்டி கட்ட வேண்டி இருக்கும். வட்டிகளிலேயே மிகவும் அதிகமான வட்டி என்றால் அது கிரெடிட் கார்டு வட்டிதான்.
தாமதக் கட்டணம்!
நாம் குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தாவிட்டால் தாமதக் கட்டணமாக 300-600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்களும் உங்களது நண்பரும் உணவு விடுதியில் 200 ரூபாய் செலவழித்திருக்கிறீர்கள் என்றால் அதற்குகூட கட்டணமாக 300 ரூபாய் தாமதக் கட்டணமாகக் கட்ட வேண்டி இருக்கும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் முடிந்த மட்டில் தாமதமாகப் பணம் செலுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பணம் எடுக்க கட்டணம்!
எக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கக் கூடாது. அதற்கு 2.55% வட்டி வசூலிக்கப்படுகிறது அல்லது 250 ரூபாய் மினிமம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நமக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தாண்டி செலவு செய்ய சில கிரெடிட் கார்டுகள் உதவுகின்றன. ஆனால், இதற்கு 300 முதல் 600 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
மறைமுகக் கட்டணம்!
ஒரு லட்சம் மதிப்பிலான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களால் முழுமையாகப் பணம் செலுத்த முடியவில்லை என்றால் 80% உபயோகத்தை மற்ற கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கூடுதல் கால அவகாசம் கிடைப்பதுடன், சில கார்டுகளில் குறைந்த வட்டியுடன் அந்த பணத்தை தவணை முறையிலும் செலுத்தலாம். இதற்கு மறைமுக கட்டணங்கள் இருக்கும். அதை உறுதிப்படுத்திய பிறகு மாற்றுவது அவசியம்.
கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தினால் அது எமன் அல்ல,  நண்பன்தான் என்பதை உணர்வீர்கள்!

Monday 6 August 2012

Where To Park Your Retirement Funds???

It is yet another view of how to choose an investment vehicle for our retirement funds to beat inflation. I am not here to change any one and I don't believe that I can change anybody, at the same time I would be very happy if you look at this mail and supporting data as one more perspective probably you appreciate the efforts I have put in.
Thanks a lot for your continuous reading....

In India people who work for Government Service, saves 10% of their basic salary for their pension fund. Which keeps accumulating over the entire service, is almost 30 plus years?
At the time of retirement, 1/3 of the pension fund can be taken as a commutation and the rest can be given as a pension as long as the individual survives and after that spouse will get 50% of the pension till her life time.
Today, many of us are working for non-govt. service so we do not have the privilege to enjoy any pension from our employer. But, if one contributes the same thing what the govt. employee does it (without their knowledge/unconsciously) then we can also create a much bigger corpus, provided one is disciplined. These are the accumulation phase.
When it comes to distribution phase, everybody has a got a worry and where it can be put it safe and withdraw on a monthly basis, so people choose different vehicle without understanding its risk vs reward or return.
Whenever advisor or planner advice for their clients, as far as retirement planning is concerned they asked to put it in a much safer place, because the investor/client do not have the time to create more wealth. Yes, it is very true. But, at the same time if the individual is committed, as if it is like a government pension, and don't have the right to withdraw that money, then they can take a little risk because of longer tenure.
Whenever we don't have the option or choice to exercise we are not questioning anything, but given a choice we want to question everything.
I always believe in numbers and it excites me whenever am fiddling with the data.
Today, I have taken two balanced funds which exist for more than 17 years (HDFC Prudence and Birla Sun Life 95 Fund) and I have taken 10 consecutive years, if one invested their retirement kitty and keep withdrawing 10% per annum as interest and withdraw monthly. It not only gives monthly pension but also give appreciation in the pension kitty, I have attached the data for your reference.
If the same thing can be extended for 15 years then the appreciation is mind boggling. All the 15 plus years markets are volatile and it has seen all the ups and downs.
When people are betting on PROPERTY and GOLD which is basically speculative investment in nature and don't have the proper track record which is not regulated by any regulator. Why don't one look at the investment which has a strong track record and highly regulated  by the regulator, for our better future.
I am just sharing with you one more perspective to look at the investment and what are risk and the reward over a period of time.
When we go to different places, we deploy different vehicle to reach the destination like walking, cycle, two wheeler, car, bus, train and flight. But, when it comes to investment most of them are using only Bank Deposit, Post Office and Insurance which is a two wheeler and to cover a long distance these vehicle will be a disaster.
Investment is very simple, provided if you are disciplined and understand how each instrument behaves then money will never ever be your problem at any point of time.

We have 365 days' time to work for money and hardly found time to manage whatever we have earned. It is not lack of time, it is lack of interest, but if each individual spends a day at least in a year, they have much control over their finances than ever before.

It is after all our hard earned money, if we do not take care then who else will.